ஆதி காலத்தில்லிருந்தே சமூக நீதி தொடர்பான எதிர்பார்ப்பு மனிதர்களிடையே இருந்துவந்துள்ளது. மனிதனை ஒரு ஒழுங்கு நெறிக்குள் கொண்டு வர வேண்டும் என்று சம்பிரதாயங்களை உருவாக்கிய அறிஞர்கள், சாதி பாகுபாட்டை கொண்டுவந்தமையால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது.
இதனால் உயர்தோர் தாழ்ந்தோரை அடக்கியாளும் நிலை ஏற்பட்டது. இச் சாதிப் பாகுபாடனது கடவுள் அருளினால் நிகழும் செயல் ஆகையால் இறைவனின் தீர்மானத்திற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதில் மதவாதிகள் வெற்றி கண்டனர். இந்து மதத்தின் தோற்றத்தை சிக்கலாக்கிய பண்டைய பிராமணர்கள் சமூகத்தின் அனைத்து வரப்பிரசதங்களையும் தனதாக்கி கொள்ள சாதி பாகுபாட்டை ஏற்படுத்தி கொண்டனர்.
இன்றுவரை எவ்வளவு தான் சமூகம் முன்னேறினாலும் சாதி பாகுபாட்டை மனிதன் இன்னும் விட்டபாடில்லை.
சாதி பாகுபாட்டை விட மனித மான்பு மிகவும் மோசமாக பதிக்கப்பட்ட நிலையை நாம் ஆரம்ப காலத்தில் காணலாம்.அதாவது மனிதர்கள் மிகவும் கிழ்த்தரமான முறையில் அடிமைகளாக பாவிக்கப்பட்டனர்.உரோம சாம்ராச்சியம் நிறுவப்பட்ட காலப்பகுதியில் மனிதர்களில் ஒரு பகுதியினர் அடிமைகளாக விலங்கு மாட்டப்பட்டு,அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு விலங்குகள் போல் நடத்தப்பட்டனர்.
மேலும் அடிமை வியாபாரமானது 1600 /1700 ஆண்டளவில் ஐரோப்பியர்கள் வட அமரிக்காவில் குடியேற்றத்தை ஏற்படுத்தி அதன் அபிவிருத்திக்கு என ஆபிரிக்காவில் சுகந்திரமாக திரிந்த கறுப்பினத்தவர்களை விலங்குகளைப்போல் பிடித்து கப்பலில் ஏற்றி அனுப்பி,அவர்களை ஏலத்தில் அடிமைகளாக்கினர்.
இவ்வாறாக நீண்ட கால புரட்சியின் பின்னர் அடிமைதனத்திலிருந்து விடுபட அடிமைகள் மட்டுமன்றி,சாதாரண மக்களும், புத்திஜீவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தவகையில் இது மனித உரிமைகளை பெற்றெடுக்க நடந்த போராட்டங்களில் ஒரு முக்கியமான மையில் கல்லாகும். மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் பிரித்தானியர்கள் முக்கியமானவர்கள்.
பாரம்பரிய மன்னராட்சி உடைய அத்தகைய நாட்டில், மன்னராட்சி அமைப்பை பாதுகாக்கும் அதேவேளை மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மன்னராட்சியில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
இந்த வகையில் 1215 மக்னா காட்ட உடன்படிக்கையின் மூலம் மன்னருக்கு இருந்த பலத்தை குறைத்து பாராளுமன்றத்தின் பலம் ஓரளவு கூட்டப்பட்டது.
"மக்னா காட்டவின்" 39 ஆம் பிரிவு, எந்தவொரு மனிதனையும் கைதுசெய்வதற்கான, காணமல் போகச்செய்வதட்கான, சித்திரவதை செய்வதற்கான பலம் ஆட்சியாளருக்கு இல்லை.என்று கூறுகிறது. இந்தவகையில் இன்று பெரிதும் பேசப்படுகின்ற மனித உரிமைகள் தொடர்பான அடிப்படையை "மக்னா காட்டவில்" காணக்கூடியதாக உள்ளது.
மீண்டும் அடுத்த பதிவில் சந்த்திப்போம்......
Africa’s High Teenage Pregnancy Rate Demands Strong Response
-
Click to expand Image A 19-year-old woman carries her child outside her
secondary school classroom in Nyeri, Kenya, January 8, 2021. © 2021 Monicah
Mwangi/...
12 hours ago
0 comments:
Post a Comment