Sunday, August 22, 2010

இலங்கையும், உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறையும்

0 comments
இன்றைய உலகில் வாழ்கின்ற அனைவரிடமே ஏனையவர்களிடத்தே   கூறமுடியாத அல்லது கூறவிரும்பாத பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றது . ஏன் நீங்கள் கூட  அவ்வாறான  பல விடயங்களை உங்கள் மனதில் போட்டு புதைத்துள்ளிர்கள் தானே?
அவ்வாறான ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் விடயங்களை வெளியே கொண்டுவருவதற்காக சிக்மன் ப்றோயிட் என்ற உளவியரலால் முன்வைக்கப்பட்டதே  உளப்பகுப்பாய்வு கொள்கை ஆகும்.


உளப்பகுப்பாய்வு என்பது மனிதனின் ஆழ்மனதிலே பதியப்பட்ட விடயங்கள் மனித நடைத்தையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பரிசீலிக்கும் முறையாகும். இதன் படி இம்முறையானது மனித நடத்தையிலும் ஆளுமையிலும் மறைவான மூல இடங்களை ஆராய்கின்றது.
இந்த உளப்பகுப்பாய்வின் முலம் மனிதனின் ஆழ்மனதில் உள்ள விடயங்களை கண்டு பிடிக்கவும்,உளவியல் ரீதியாக  பதிக்கப்பட்ட ஒருவரை  மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வரவும் முடியும்.

கூடுதலாக  எம்முடைய ஆழ்மனத்தில் நிறைவேறாத பாலியல் ஆசைகள்,பயம்,அறிவுபூர்வமற்ற  விருப்புகள்,வன்முறை,ஒழுங்கீனமான நடத்தை தூண்டல்கள்,சுயநல தேவைகள்,வெட்கப்படக்கூடிய அனுபவங்கள் போன்றவை காணப்படுகின்றன. இவ்வாறான உணர்ச்சிகளை இலங்கையர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை.
இதற்கு காரணம் கலாசாரம், பண்பாடு, மதவிடயங்கள், காரணமாக இலங்கையர்கள் ஓர் வரையறைக்கு உட்பட்டு வாழ்கின்றனர்,மனநோயினை ஒரு மனநோய் தான் என்று ஏற்றுக்கொள்ள இலங்கை சமூகத்தினர் முன்வராமை,
உளவியலாளர்கள் தொடர்பான நம்பிக்கையின்மை,மருந்துகள் மூலமே நோய்களை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கம். 

உதாரணமாக துஷ்பிரயோகத்துக்கு உட்பட்ட சிறுவனோ சிறுமியோ தான் அதன் காரணமாக மன உளைச்சலுக்கு உட்படுகின்றோம் என்பதை சமூகம் அறிவதனை விரும்புவதில்லை.மேலும் அவர்களுடைய பெற்றோர்கள் அதனை வெளியே கூற அனுமதிப்பதும்மில்லை.இதற்கு காரணம் இலங்கை சமுகத்தவர்களிடையே காணப்படும் கலாசார பண்பாட்டு அம்சங்களாகும்.அத்தோடு பாதிக்கப்பட்டவரின் குடும்ப சூழ்நிலை,சுழல், மற்றும் தாம் தவறானவர்கள் என்று சமுகத்தில் முத்திரை குத்தப்படுவோம் என்ற பயம் காரணமாக தம்மை வெளிபடுத்த விரும்புவதில்லை.
இதன் காரணமாக குறித்த சிறுவனோ சிறுமியோ மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர்.இவ்வாறு தம்மை வெளிபடுத்த பல தடைகள் இருப்பதால் இவ் உளப்பகுபாய்வு என்ற சிகிச்சை முறையானது  இலங்கை சமுகத்துக்கு பொருந்துவதில்லை.

அடுத்து இலங்கை சமுகத்தவர்களிடையே மன நோய் தொடர்பாக தெளிவு மற்றும் அறிவு காணப்படுவதில்லை.மேலும் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டால் தமக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதி பேய்ஆட்டுதல்,மந்திருத்தல்,தாயம் கட்டுதல் போன்ற மூடநம்பிக்கைகளை நாடுகின்றனரே ஒழிய அதற்கேற்ற உளவியல் சிகிச்சை முறைகளை நாடுவதில்லை.

மேலும் இலங்கை சமுகத்தை பொறுத்தவரை பாலியல் என்பது அருவருக்கதக்கதவவும் அது பற்றி வெளிப்படையான கருத்து  என்பது காணப்படுவதில்லை. உதாரணமாக இலங்கை சமூகத்தினரிடையே ஓரின சேர்க்கையில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இருக்கின்ற போதும் அவர்கள் தமது ஆசைகளை மனதில் அடக்கி கொண்டு சாதாரண திருமண வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.இதனால் இவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர்.

அதுபோன்று இலங்கை மக்களின் குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு முரண்பாடுகளும் பிரச்சனைகளும் நிலவுகின்றன.எனினும் அதிகமாக பெண்கள் அதனை வெளிபடுத்த விரும்புவதில்லை.அவர்கள் தமது கணவர்மார்களால் ஏற்படும் கசப்பான விடயங்களை வெளியே கூறாமல் தமது  மனதில் போட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் உள நோய்க்கு உட்பட்ட ஒருவரை எமது சமூகம் நோக்கும் பார்வை  சம்பந்தபட்டவரையும் அவரது குடும்பத்தையும் பாதிப்பதாக உள்ளது.இங்கு உள  நோய்க்கு உட்பட்டவர் மட்டுமல்லாது அவரது குடும்பமும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றது.அத்தோடு சமூகத்தால் தாம் கேலி செய்யப்படுவோம் என்ற பயத்தின் காரணத்தாலே பெரும்பாலும்  அவர்கள் தம்மை வெளிபடுத்த விரும்புவதில்லை.

மேலத்தேய நாடுகளை  பொறுத்தவரை இம் சிகிச்சை முறையானது பிரபலமாக உள்ளது.காரணம் அவர்களின் சமூக கட்டமைப்பு. ஆனால் வளர்முக நாடுகளை பொறுத்த வரை அவ்வாறல்ல. எனவே எமது சமூகட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவரும் பட்சத்தில் இவ்வாறான சிகிச்சை முறைகள் மூலம் உளநோய்க்கு உட்பட்டவரை இலகுவாக குணப்படுத்த முடியும்.

Tuesday, August 17, 2010

மனித உரிமைகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி

0 comments
மனித  உரிமைகள் என்ற எண்ணக்கரு நவீன உலகத்தில் தீடிரென தோன்றியது அல்ல .
மனித வரலாற்றில் அது படிப்படியாக தோன்றி நியாயத்தை குறிக்கோளாகக் கொண்டு நாகரிகமடைந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மனித உரிமைகள் பற்றிய அமைப்புகளால் மேற்கொள்ளபட்ட  பாரிய முயற்சியாக இது காணப்படுகிறது .


 மனித சமுதாயத்தின் ஆரம்பமும் , மனித உரிமைகள் தொடர்பாக வரலாற்றுக்கு முந்திய காலத்தில் நிலவிய நிலைப்பாடும் .


வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது எழுத்திலோ அல்லது தொல்பொருள்சான்றுகள் மூலமோ  உறுதிபடுத்த முடியாத காலமாகும் .

அக்  காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குழுக்களாக காடுகளில் வாழ்ந்து விலங்குகளை வேட்டையாடி இடத்துக்கு இடம் அலைந்து சென்றனர்.இவ்வாறு இவர்கள் செல்லும்போது எதிர்படும் எதிரிகள் அல்லது வேற்றுகுலத்தவர்களை தாக்கி வந்தனர் .இதில் இறப்பவர்களின் சடலங்களை வெற்றிபெற்றவர்கள் மாமிசமாக உணவுக்காக பயன்படுத்தினர் .காயமடைந்தவர்களின் உடல்களை மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் உணவுக்கென பாதுகாத்து வைத்திருந்தனர் .காயமடையாதோரை மரத்தில் கட்டி வைத்து சில நாட்களுக்கு பின்னர் கொன்று உணவாக உட்கொண்டனர் .இதிலிருந்து அக் கால மனித சமுதாயம் எவ்வளவு கொடூரமானது என்பது தெளிவாகிறது(இந்தக்காலத்தை போலவே!!!)  .

இத்தகைய மனித சமுதாயத்தில் ஏற்பட்ட கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத கட்டத்தில் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக அரசு காணப்படுகிறது .

இதில் நான் கூறுவது என்னவென்றால் மனித சமுதாயத்தில் நிலவிய அத்தகைய பயங்கரத்தின் மத்தியிலும் மனிதன் மனித உரிமைகளை தேடுவதற்கு முயற்சித்துள்ளான்.

அக் காலத்தில் அந் நாகரீகம் அடையாத மனிதர்களால் எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளால்  தான்  தற்கால மனிதன்  உயிரை பாதுகாத்துக்கொள்வதற்கும்    சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் வழிகோலப்பட்டது   என்றால் நம்பமுடிகிறதா ?

மனித மாமிசம்  உண்பது தவிர்க்கப்படவேண்டும் என்று மனிதசமுதாயம் முடிவெடுத்தது வரலாற்றுக்கு  முந்தியது .வரலாற்றுக்கு  முந்திய காலத்தில்  தொடக்கப்பட்ட மற்றுமொரு  சம்பிராதயம் ஆடை அணிவதாகும் .இன்று இது மனிதனுடைய கௌரவத்துக்கு காரணமாக அமைகிறது .


 மனித மாமிசம் உண்ணும் வழக்கம் இன்னும் இருக்குமானால் இன்றையகாலகட்டத்தில் உங்களுக்கும் எனக்கும் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா ?மிகவும் அற்பமான தேவையற்ற விடயங்களுக்கு கூட இன்றைய காலகட்டத்தில்  நாம் ஒருவர் ஒருவரின் உயிரை பறிக்கும் நிலையில் ,பசியை போக்குவதற்கு  மனித மாமிசத்தின் பொருட்டு உயிர்களை பறிக்கின்ற நிலையை இன்று காணமுடியுமா? (மீண்டும் பழைய நிலைக்கு செல்வது போலவே இன்றைய சூழல் உணர்த்துகிறது !! ) 

இதன் அடிப்படையில் பார்க்கும் போது எமது தற்பாதுகாபிற்க்காக உரிமைகளை பாதுகாப்பதற்கான சமூக மரபுகள் ஆரம்பிக்கப்பட்டன .ஆகையால் சம்பிரதாயம்
 வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே  ஆரம்பிக்கபட்டிருக்கவேண்டும்.ஆடை அணியும்  சம்பிரதாயம் ஆரம்பிக்கபட்டதன் விளைவாக இன்று நாம்  சமுகத்தில் மனத்தோடும் மரியதயகவும் வாழ முடிகிறது .

மனிதன் ஒரு சமூக பிராணி .அவனால்  தனித்து வாழ முடியாது .அவன் சமுகமவே வாழுகிறான் .சமுகம்  வளர வளர பிரச்சனைகளும் அதிகரிக்கின்றது.இதனால் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏற்படுகிறது .மனித வரலாற்று முழுவதும், ஆயுதம் அல்லது மனித பலம் கொண்ட குழு, மற்றவர்களை அடக்கி ஆளுகிறது .இத்தகைய ஒரு சமுதாய பின்னணியிலேயே மனித உரிமைகள் பற்றியும் அதனை பாதுகாக்கும் வழிமுறைகளும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டது .

மனித உரிமைகள் என்ற பதம் ஆரம்பத்தில் பாவனையில் இருக்கவில்லை .
மனித இரக்கம், மனித நேயம் ,மனிதாபிமானம்  போன்ற பதங்களே ஆரம்பத்தில் கையாளப்பட்டது .

இனி நாம் அடுத்த பதிவில் அரசு எவ்வாறு தோற்றம் பெற்றது ?மனித உரிமையை இனம்காண மனிதனை தூண்டிய காரணங்களை பார்ப்போம்?

Monday, August 16, 2010

ஓர் அறிமுகம் ......

0 comments
அறிமுகம் ......


மனிதம் ஒரு மூலையில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது . மனிதநேயத்தின் ஒரு பணியாக ஒவ்வொருவரிடமும் மனிதம் மற்றும் அதன் சட்டங்கள்  சரியான முறையில் அனைவரையும் சென்றடைய எடுக்கும் முதல் முயற்ச்சியாக இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். அனைவரும் அடிப்படை உரிமைகள் அடிப்படை சட்டங்கள், உலகை, சூழலை  பாது காக்க வேண்டிய கட்டாயத்தன்மை பற்றி அறிந்திருத்தல் வேண்டும் . சிறு மாற்றமே பெரியதொரு மாற்றத்தை கொண்டு வரும்.   இதற்க்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை.

நம்மில் நம் பூமியில்  நாம் இறைவனை காண்போம்...