Tuesday, August 17, 2010

மனித உரிமைகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி

0 comments
மனித  உரிமைகள் என்ற எண்ணக்கரு நவீன உலகத்தில் தீடிரென தோன்றியது அல்ல .
மனித வரலாற்றில் அது படிப்படியாக தோன்றி நியாயத்தை குறிக்கோளாகக் கொண்டு நாகரிகமடைந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மனித உரிமைகள் பற்றிய அமைப்புகளால் மேற்கொள்ளபட்ட  பாரிய முயற்சியாக இது காணப்படுகிறது .


 மனித சமுதாயத்தின் ஆரம்பமும் , மனித உரிமைகள் தொடர்பாக வரலாற்றுக்கு முந்திய காலத்தில் நிலவிய நிலைப்பாடும் .


வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது எழுத்திலோ அல்லது தொல்பொருள்சான்றுகள் மூலமோ  உறுதிபடுத்த முடியாத காலமாகும் .

அக்  காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குழுக்களாக காடுகளில் வாழ்ந்து விலங்குகளை வேட்டையாடி இடத்துக்கு இடம் அலைந்து சென்றனர்.இவ்வாறு இவர்கள் செல்லும்போது எதிர்படும் எதிரிகள் அல்லது வேற்றுகுலத்தவர்களை தாக்கி வந்தனர் .இதில் இறப்பவர்களின் சடலங்களை வெற்றிபெற்றவர்கள் மாமிசமாக உணவுக்காக பயன்படுத்தினர் .காயமடைந்தவர்களின் உடல்களை மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் உணவுக்கென பாதுகாத்து வைத்திருந்தனர் .காயமடையாதோரை மரத்தில் கட்டி வைத்து சில நாட்களுக்கு பின்னர் கொன்று உணவாக உட்கொண்டனர் .இதிலிருந்து அக் கால மனித சமுதாயம் எவ்வளவு கொடூரமானது என்பது தெளிவாகிறது(இந்தக்காலத்தை போலவே!!!)  .

இத்தகைய மனித சமுதாயத்தில் ஏற்பட்ட கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத கட்டத்தில் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக அரசு காணப்படுகிறது .

இதில் நான் கூறுவது என்னவென்றால் மனித சமுதாயத்தில் நிலவிய அத்தகைய பயங்கரத்தின் மத்தியிலும் மனிதன் மனித உரிமைகளை தேடுவதற்கு முயற்சித்துள்ளான்.

அக் காலத்தில் அந் நாகரீகம் அடையாத மனிதர்களால் எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளால்  தான்  தற்கால மனிதன்  உயிரை பாதுகாத்துக்கொள்வதற்கும்    சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் வழிகோலப்பட்டது   என்றால் நம்பமுடிகிறதா ?

மனித மாமிசம்  உண்பது தவிர்க்கப்படவேண்டும் என்று மனிதசமுதாயம் முடிவெடுத்தது வரலாற்றுக்கு  முந்தியது .வரலாற்றுக்கு  முந்திய காலத்தில்  தொடக்கப்பட்ட மற்றுமொரு  சம்பிராதயம் ஆடை அணிவதாகும் .இன்று இது மனிதனுடைய கௌரவத்துக்கு காரணமாக அமைகிறது .


 மனித மாமிசம் உண்ணும் வழக்கம் இன்னும் இருக்குமானால் இன்றையகாலகட்டத்தில் உங்களுக்கும் எனக்கும் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா ?மிகவும் அற்பமான தேவையற்ற விடயங்களுக்கு கூட இன்றைய காலகட்டத்தில்  நாம் ஒருவர் ஒருவரின் உயிரை பறிக்கும் நிலையில் ,பசியை போக்குவதற்கு  மனித மாமிசத்தின் பொருட்டு உயிர்களை பறிக்கின்ற நிலையை இன்று காணமுடியுமா? (மீண்டும் பழைய நிலைக்கு செல்வது போலவே இன்றைய சூழல் உணர்த்துகிறது !! ) 

இதன் அடிப்படையில் பார்க்கும் போது எமது தற்பாதுகாபிற்க்காக உரிமைகளை பாதுகாப்பதற்கான சமூக மரபுகள் ஆரம்பிக்கப்பட்டன .ஆகையால் சம்பிரதாயம்
 வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே  ஆரம்பிக்கபட்டிருக்கவேண்டும்.ஆடை அணியும்  சம்பிரதாயம் ஆரம்பிக்கபட்டதன் விளைவாக இன்று நாம்  சமுகத்தில் மனத்தோடும் மரியதயகவும் வாழ முடிகிறது .

மனிதன் ஒரு சமூக பிராணி .அவனால்  தனித்து வாழ முடியாது .அவன் சமுகமவே வாழுகிறான் .சமுகம்  வளர வளர பிரச்சனைகளும் அதிகரிக்கின்றது.இதனால் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏற்படுகிறது .மனித வரலாற்று முழுவதும், ஆயுதம் அல்லது மனித பலம் கொண்ட குழு, மற்றவர்களை அடக்கி ஆளுகிறது .இத்தகைய ஒரு சமுதாய பின்னணியிலேயே மனித உரிமைகள் பற்றியும் அதனை பாதுகாக்கும் வழிமுறைகளும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டது .

மனித உரிமைகள் என்ற பதம் ஆரம்பத்தில் பாவனையில் இருக்கவில்லை .
மனித இரக்கம், மனித நேயம் ,மனிதாபிமானம்  போன்ற பதங்களே ஆரம்பத்தில் கையாளப்பட்டது .

இனி நாம் அடுத்த பதிவில் அரசு எவ்வாறு தோற்றம் பெற்றது ?மனித உரிமையை இனம்காண மனிதனை தூண்டிய காரணங்களை பார்ப்போம்?

0 comments:

Post a Comment